search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் தீக்குளித்து தற்கொலை"

    திருவெறும்பூர் அருகே கணவரின் குடிப்பழக்கத்தால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    திருவெறும்பூர்:

    திருவெறும்பூர் அருகே உள்ள கிருஷ்ண சமுத்திரம் புதுத்தெருவைச் சேர்ந்தவர் மருதராஜ். இவரது மனைவி சரிதா (36) இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளது. 

    மருதராஜ் துவாக்குடி அண்ணா வளைவில் உள்ள ரேசன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மது குடிப்பழக்கம் உண்டு. தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார். 

    இந்நிலையில் நேற்றும் இரவு மருதராஜ் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதை சரிதா தட்டிக் கேட்டார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மருதராஜ், சரிதாவை தாக்கியதாக கூறபடுகிறது. பின்னர் மருதராஜ் வெளியே சென்று விட்டார். 

    இதனால் மனமுடைந்த சரிதா தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். வெப்பம் தாங்க முடியாமல் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் சரிதாவை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து மருதராஜிடம் விசாரணை நடத்தி வரு கிறார்கள்.
    3 மாத குழந்தையுடன் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை:

    மதுரை தத்தனேரி வ.உ.சி. நகரைச் சேர்ந்த வீரமணி மனைவி சித்ரா (வயது37). இவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே 10 வயது மகனுடன் தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் சித்ராவுக்கு அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவருக்கு 3 மாத கைக் குழந்தை உள்ளது.

    இதனால் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் சித்ராவை ஏளனமாக பேசினார்கள். இதனால் மனவேதனை அடைந்த சித்ரா நேற்றிரவு வீட்டில் தீக்குளித்தார். உடலில் பற்றிய தீ 3 மாத குழந்தை மீதும் பரவியது.

    சித்ரா உடல் முழுவதும கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய குழந்தையும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தது.

    இதுகுறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெம்பாக்கம் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    செய்யாறு:

    வெம்பாக்கம் அருகே உள்ள பெருங்காட்டூரை சேர்ந்தவர் பெருமாள் இவரது மனைவி அபிராமி இவர்களுக்கு 1மகன் 1மகள் உள்ளனர்.

    அபிராமிக்கு கடந்த சில மாதங்களாக உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த அபிராமி சம்பவத்தன்று தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசுஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அபிராமி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து மோரணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே உள்ள வடச்சேரி பகுதியை சேர்ந்தவர் விஜய் இவரது மனைவி சங்கீதா (வயது 40). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது. தம்பதிக்கு 1 மகள் உள்ளார்.

    விஜய், சங்கீதாவிற்கு கருத்துவேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் தகராறு ஏற்படவே மனமுடைந்த சங்கீதா வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சங்கீதாவை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர்.

    அங்கு சங்கீதா சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து உமராபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சங்கீதாவிற்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் திருப்பத்தூர் உதவி-கலெக்டர் பிரியங்கா விசாரணை நடத்தி வருகின்றார்.

    அறந்தாங்கியில் குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கியை அடுத்த கூகனூர்குடியிருப்பைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி சுமித்ரா(வயது 20). இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 6 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.

    இந்த  நிலையில் கடந்த மாதம் 15-ந்தேதி தங்கவேலு விற்கும், சுமித்ராவிற்கும் இடையே குடும்பதகராறு ஏற்பட்டதாக    கூறப்படுகிறது. இதில் மனவேதனை அடைந்த சுமித்ரா தன் உடலில் மண்எண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். 

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சுமித்ரா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது முத்துப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள அதஞ்சவிளாகத்தை சேர்ந்த கணேசன் என்பவர் மகள் காயத்ரி (வயது 18). கணேசன் இறந்து விட்டதால் அவரது மனைவி கூலிவேலைக்கு சென்று வந்தார். காயத்ரி பிளஸ்-2 வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். 

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காயத்ரிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த திருமணத்தில் அவருக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது. நேற்று வீட்டில் தனியாக இருந்த காயத்ரி தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகிய காயத்ரியை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். 

    இந்த பரிதாப சம்பவம் குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது முத்துப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பாபநாசம் அருகே வீட்டு வேலை செய்யாததை தாய் கண்டித்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே திருக்கருக்காவூர் கோவில்பத்து கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் துர்கா (வயது 20). இவர் பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் துர்கா , வீட்டு வேலைகளை செய்யாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் துர்காவை அவரது தாய் கண்டித்து திட்டியதாக தெரிகிறது. இதில் வாழ்க்கையில் வெறுப்படைந்த துர்கா , வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்தார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி துர்கா நேற்று இறந்தார்.

    இதுபற்றி பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை அருகே கணவர் விபத்தில் சிக்கி வேலைக்கு செல்லாமல் இருப்பதால் மனமுடைந்த பெண் தீக்குளித்து இறந்தார்.

    மதுரை:

    மதுரை ஒத்தக்கடை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் அஞ்சுகம் (32). இவரது கணவர் அன்பரசன். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் அன்பரசனுக்கு 5 மாதங்களுக்கு முன்பு வாகன விபத்து நடந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவரால் சரிவர வேலைக்கு போக முடியவில்லை.

    இதனால் அஞ்சுகம் குடும்பம் நடத்த வருமான மின்றி தவித்தார்.

    இந்த நிலையில் அஞ்சுகம் சம்பவத்தன்று இரவு வீட்டில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். இதனால் உடல் முழுவதும் வெந்த நிலையில் அவருக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அஞ்சுகம் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஒத்தக்கடை போலீசில் அஞ்சுகம் தந்தை பாலசுப்பிரமணியம் கொடுத்த புகாரின் பேரில் டி.எஸ்.பி. வெற்றிசெழியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள மேலமங்களம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் சென்னை கோயம்பேட்டில் ரிக்க்ஷா ஓட்டி வருகிறார். இவரது மனைவி ஜெயலலிதா(வயது 25). இவர்களுக்கு கவுதமன்(3½) என்ற மகனும், பூமிகா(1) என்ற மகளும் உள்ளனர்.

    ஜெயலலிதா தனது குழந்தைகளுடன் மேலமங்களத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு விக்னேஷ் மேலமங்களத்திற்கு வந்திருந்தார். பின்னர் அவர் வேலைக்கு செல்லாமல் அங்கேயே தங்கி விட்டார். இதனால் கணவன்-மனைவிக் கிடையே தகராறு ஏற்பட்டது.

    சம்பவதன்று விக்னேசை வேலைக்கு செல்லும்படி ஜெயலலிதா கூறினார். ஆனால் அதற்கு அவர் மறுத்து விட்டார்.

    இதனால் அவர்களுக் கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அங்கு வந்த விக்னேஷின் உறவினர்களும் ஜெயலலிதாவை திட்டினர்.

    இதனால் மனம் உடைந்த ஜெயலலிதா வீட்டில் இருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். தீ அவர் உடல் முழுவதும் பற்றி எரிந்தது. ஜெயலலிதா வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் அங்கு சென்று தீயை அணைத்து அவரை மீட்டனர். இதில் ஜெயலலிதாவிற்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

    பின்னர் அவரை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு ஜெயலலிதா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து புகாரின்பேரில் திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×